
பிரிட்டன் அரசு புதிய அவசரக்கால எச்சரிக்கை சேவையின் முதல் சோதனையை நடத்தி முடித்தது. இது அந்நாட்டிலுள்ள அனைத்து கைப்பேசியிலும் மூன்று மணி அளவில் உரத்த அலாரம் ஒலிக்கும் வகையில் அமைக்கப்பட்டது. இது போன்ற செயல்பாடு கனடா, ஜப்பான், நெதர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் முன்மாதிரியாக இருக்கிறது.

இரண்டாம் உலகப் போரின் போது, 864 ஆஸ்திரேலியா வீரர்களுடன் மூழ்கிய ஜப்பானிய வணிகக் கப்பல் தென் சீனக் கடலிலுள்ள ஆழ்கடல் ஆய்வு நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆஸ்திரேலியா பாதுகாப்பு அமைச்சர் Richard Marles அறிவித்தார்.

ஸ்காட்லாந்தின் தெற்கு கடற்கரையில் அமைந்திருக்கும் பார்லோக்கோ தீவு 190000 டாலருக்கு ( Rs 1.5 கோடி) விற்பனை செய்யப்படவிருக்கிறது. இது மக்கள் யாவரும் வசிக்காத தீவாகும்.

ட்விட்டரில் சமீபத்தில் சந்தா செலுத்தாத கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டது. இந்த நிலையில், குறைந்தது பத்து லட்சம் பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் கணக்குகளுக்கு மீண்டும் அதிகாரபூர்வ அங்கீகாரம் அளிக்கப்படும் என்று எலன் மஸ்க் முடிவெடுத்ததாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இங்கிலாந்திற்கான உக்ரைன் தூதரான Vadym Prystaiko, `ரஷ்ய அதிபர் புதின் இறந்தால் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்' என்று கூறி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.

மியான்மாரில் உயர்மட்ட தேர்தல் அதிகாரியான Sai Kyaw Thu, அந்த நாட்டின் வணிகத் தலைநகரான யாங்கூனில், ராணுவ ஆட்சியை எதிர்க்கும் போராளிகளால் நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் பனிப்பாறைகள் உருகியிருப்பதாக ஐநா ஆய்வறிக்கை வெளியிட்டது. 2022-ம் ஆண்டில் உலகளாவிய சராசரி வெப்பநிலை, சராசரியை விட 1.15 C அதிகமாக இருந்தது என்று கூறப்படுகிறது.

பிரிட்டனின் முக்கிய எதிர்க்கட்சியான லேபர் பார்ட்டியை சேர்ந்த எம்.பி-யான Diane Abbott ' யூதர்கள் இனவெறியை எதிர்கொள்ளவில்லை' என்று கூறியதற்கு அந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

சூடானின் தலைநகரான கார்ட்டூமில் தொடர்ந்து கடுமையான தாக்குதல்கள் நடந்து வருவதால், பல நாடுகள் அதன் தூதர்களையும் மக்களையும் வெளியேற்றி வருகின்றன.

கென்யாவின் கடற்கரை நகரமான மலிண்டி அருகே , 47 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டது. இந்த நிலையில், அங்கிருக்கும் ஒரு மதபோதகர் அவர்களை உணவு உண்ணாமல் இருக்க உத்தரவிட்டதாகக் கண்டறியப்பட்டது.
from International https://ift.tt/7uBvELd
via
