
கம்போடியா பிரதமர் ஹுன் சென் (Hun Sen), தனக்கு எதிராகச் செயல்பட்டதாக மெட்டா நிறுவனத்தின் அதிகாரிகள் 22 பேரைக் கறுப்புப் பட்டியலில் இணைக்க உத்தரவிட்டார். அவரின் பேஸ்புக் கணக்கை ரத்து செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையே தூதர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இது இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியா நகரில் மர்ம நபர்கள் ஒருவர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் சிக்கி ஐவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

இஸ்ரேலின் ஜெனின் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்திருக்கிறது.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் அருகே குடிசைப்பகுதியில் எரிவாயுக் கசிவு ஏற்பட்டதில் குழந்தைகள் உட்பட 16 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ரஷ்யப் பத்திரிகையாளர் எலினா மிலாஷினா செச்சினியாவில் மோசமாகத் தாக்கப்பட்டதையடுத்து, குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ரஷ்ய புலனாய்வாவார்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ஹாங்காங்கை சேர்ந்த பாடகியான Coco Lee, தனது 48-ம் வயதில் காலமானார். சில வாரங்களுக்கு முன்னர் தற்கொலை முயற்சி செய்த லீ, தற்போது உயிரிழந்தார்.

தெற்கு ஸ்வீடனில் ஜூன் மாதம் நடந்த காலநிலை போராட்டத்தின்போது காவல்துறைக்கு கீழ்ப்படியாததாகக் காலநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ராணுவ தலைமையகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது உட்பட 6 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது.
from International https://ift.tt/gQqO0Pj
via
