சீனாவில் உள்ள Huaxi என்ற கிராமம், `கிராமப்புறம் என்றால் இப்படித்தான் இருக்கும்' என்று நீண்ட காலமாக நிலவி வந்த பழமையான கற்பனைகளை தகர்த்து.. அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
சீனாவின் ஷாங்காய் பகுதியில் இருந்து இரண்டு மணி நேர பயணித்தில் உள்ளது Huaxi கிராமம். இது 1960-ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி கமிட்டியின் முன்னாள் செயலாளரான வு ரென்பாவோ என்ற தலைவரால் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்த கிராமத்து மக்கள் மிகவும் எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்துள்ளனர். ஆனால் தற்போது இவர்கள் இலவச மருத்துவம், கல்வி, ஆடம்பர வீடுகள் மற்றும் கார் போன்ற வசதிகளுடன் வாழ்கின்றனர்.
இந்த ஆடம்பரங்கள் அனைத்தும் இவர்களுக்கு எளிதாக கிடைக்கவில்லை. இவ்வளவு ஆடம்பரங்கள் இருந்தும் இவர்கள் உழைக்காமல் இருக்க முடியாது. குடியிருப்பாளர்கள் அனைவரும் வாரத்தின் 7 நாள்களும் வேலை செய்ய வேண்டும். Huaxi கிராம மக்களின் பாரம்பரிய தொழில் விவசாயம். இம்மக்கள் உற்பத்தி துறையில் இருந்து மட்டும் 8 பில்லியன் டாலர் வருவாயை கொண்டுவரும் 60 நிறுவனங்களை வைத்துள்ளனர். கிழக்கு சீனாவில் உள்ள கிராமம் தற்போது சுற்றுலாத்துறையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இங்குள்ள மக்களுக்கு அரசே இலவசமாக வீடு மற்றும் கார் ஆகியவற்றை வழங்குகிறது. பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் மட்டுமே இந்த ஆடம்பரமான வாழ்க்கை முறையை பெற முடியும். இங்கு புதிதாக வருபவர்களுக்கு அந்த மாதிரியான ஆடம்பரங்கள் வழங்கப்படுவதில்லை.
இங்கு புதிதாக வருபவர்களுக்கு நிலையான ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. இங்கு பூர்வீகமாக இருக்கும் மக்களும் Huaxi-யை விட்டு வெளியேற முடியாது, அப்படி ஒருவேளை இந்த கிராமத்தை விட்டு செல்ல நினைத்தால் அவர்கள் தங்களின் குடியிருப்பு மற்றும் இதர ஆடம்பர வசதிகள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைத்து விட்டே செல்ல வேண்டும்.
இந்த கிராமத்து மக்களின் வாழ்க்கை தரம் நகர மக்களை போலவே இருக்கும். இந்த கிராமத்தில் ஹெலிபேட் மைதானங்கள், தீம் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன. இங்குள்ள மக்கள் சொந்தமாக பங்களா, கார் ஆகியவற்றை வாங்குவது மிகவும் சாதாரணமான ஒரு விஷயம். இங்குள்ள மக்கள் சிலர் தங்களுக்கென தனியாக ஹெலிகாப்டரும் வைத்துள்ளார்களாம், இதனால் சீனா முழுவதும் இதை’ சூப்பர் வில்லேஜ் என்றே அழைக்கின்றனர். இதுதான் சீனாவிலேயே மிகவும் பணக்கார கிரமமாக அறியப்படுகிறது.
from International https://ift.tt/UoXKWOc
via
